×

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களுக்கு மிதமான வெள்ள அபாய எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மிதமான வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, நாகை, பெரம்பலூர், அரியலூர், தூத்துக்குடி, புதுச்சேரி, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூருக்கு மிதமான வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 5 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் மற்றும் தூத்துக்குடி, சிவகங்கை, அரியலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட், விடுக்கப்பட்டுள்ளது. குமாரி, நெல்லை, மதுரை, விருதுநகர், திருச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கும் நாளைய தினம் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,India Meteorological Department ,Delhi ,Kanyakumari ,Ramanathapuram ,Tirunelveli ,Virudhunagar ,Madurai ,Sivaganga ,Nagapattinam ,Perambalur ,Ariyalur ,Thoothukudi ,Puducherry ,Theni ,Dindigul ,
× RELATED கடும் மூடுபனி காரணமாக அசாமில் ரயில்...