×

புயல் காரணமாக எல்லா மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் முழுநேரம் பணியில் இருக்க அறிவுறுத்தியிருக்கிறோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: புயல் காரணமாக எல்லா மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் முழுநேரம் பணியில் இருக்க அறிவுறுத்தி யிருக்கிறோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். தென்சென்னை மாவட்டத்தில்,சமூக நலத்துறையின் சார்பில்,திறன் பயிற்சி (அழகுகலை) முடித்த 10 திருநங்கைகளுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் தலா ரூ. 50,000 மானியம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். பின்னர், அழகுகலை முடித்த 10 திருநங்கைகளுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் தலா ரூ. 50,000 மானியம் வழங்கினார்.

இதை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சுகாதாரத்துறையில் ஒரு காலிப் பணியிடமாவது எங்கேயாவது இருக்கிறதா என்பதை காட்டுங்கள்; ஜீரோ காலிப்பணியிடங்கள் என்ற வகையில் மருத்துவத்துறையில் பணி நியமனங்கள் செய்யப்பட்டு வருகின்றன 1.75 லட்சம் பேர் பணிபுரியும் மருத்துவத்துறையில் காலிப் பணியிடமே இல்லை என்ற நிலை தற்போதுதான் உள்ளது. எல்லா மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் முழுநேரம் பணியில் இருக்க அறிவுறுத்தியிருக்கிறோம்.

ஓரிரு பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டாலே, காய்ச்சல் முகாம்கள் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது”. மழைத்தொடங்கிய பிறகு ஏதாவது பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மழைக்கான சிறப்பு மருத்துவ முகாம் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் முழு நேரம் மின்சாரம் தடைபடாமல் வருவதற்கு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழை பெய்தால் மருத்துவமனையில் தண்ணீர் வரும் என்ற நிலை பெரும்பகுதியான மருத்துவமனைகளில் தற்போது இல்லை என தெரிவித்தார்.

 

Tags : Minister ,Ma ,Chennai ,MLA ,Superman ,TENSENNAI DISTRICT ,SOCIAL ,WELFARE DEPARTMENT ,
× RELATED கேரள உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ்...