கேரள: சபரிமலையில் கோவையைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் முரளி (50) மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். சபரிமலை நடப்பு சீசனில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு மலையேறும்போது இடையே ஓய்வு எடுக்க வேண்டும் என சபரிமலை தலைமை மருத்துவ அதிகாரி கூறியுள்ளார்.
