×

கண்டு கொள்ளாத கோயில் நிர்வாகம் பொருட்கள் விற்பனை ஜரூர் அரசு ஐடிஐக்களில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகளில் சேர மாணவர்களுக்கு அழைப்பு


தஞ்சை, ஜன.11:  தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு அரசு தொழிற்பயிற்சி நிலைய பல்வேறு தொழில் பிரிவுகளில் காலி இடங்கள் உள்ளன. இதில் வரும் 16ம் தேதி வரை பயிற்சியாளர்கள் சேர்க்கப்பட உள்ளனர். 10ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 14 வயது நிரம்பிய ஆண், பெண் மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ் அசல், மாற்றுச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல், 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஏடிஎம் கார்டு (கல்வி கட்டணம் செலுத்த) ஆகியவற்றுடன் வந்து சேரலாம். மகளிருக்கு கணினி பயிற்சி மற்றும் டெக்னீசியன் மெக்கட்ரானிக்ஸ் தொழிற் பிரிவுகள் உள்ளன. மகளிருக்கு வயது வரம்பு இல்லை. இதில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு பேருந்து பயணச் சலுகை அட்டை, மாதாந்திர உதவித் தொகை ரூ.750, தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடைகள், பாடப்புத்தகங்கள், வரைப்படக் கருவிகள் விலையின்றி வழங்கப்படும். எனவே உடனடி வேலைவாய்ப்பு கிடைத்திடும் பல்வேறு தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags : Temple Administration ,
× RELATED சித்திரை திருவிழாவிற்கு தனிநபர்...