×

கவரிங் நகையை அடகு வைக்க முயன்ற பெண் கைது

கோவை, ஜன.11: கோவை கவுண்டம்பாளையம் எஸ்பி நகரை சேர்ந்தவர் ஜீவராம்(46). இவர் கவுண்டம்பாளையம்-வடவள்ளி ரோட்டில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது கடைக்கு வந்த பெண் ஒருவர் மோதிரத்தை அடகு வைத்து பணம் கேட்டார். அதனை ஆய்வு செய்த போது அந்த மோதிரம் தங்கம் இல்லை கவரிங் என தெரியவந்தது. இதனையடுத்து கடை ஊழியர்கள் அவரை பிடித்து துடியலூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த பெண் கோவை ஜி.என்.மில் பகுதியை சேர்ந்த ஜெயபிரபா(42) என்பதும், காந்திபுரத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஹவுஸ் கீப்பிங்க் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருவதும் தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை