காரைக்குடி, ஜன.11: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளையும் வென்று திமுக ஆட்சி அமைந்திட சபதம் ஏற்போம் என்று முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ தெரிவித்தார். காரைக்குடி அருகே சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் சாக்கவயலில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் சின்னத்துரை வரவேற்றார். முன்னாள் அமைச்சர், மாவட்ட செயலாளர் கேஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ தலைமை வகித்து பேசுகையில், தமிழக அரசு ஊழல் ஆட்சியை காப்பாற்ற அனைத்து உரிமைகளையும் அடமானம் வைத்துவிட்டார்கள். மக்களுக்காக என்றும் குரல் கொடுக்கும் இயக்கம் திமுக மட்டுமே. எந்த ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்டாலும் மக்களை சந்திப்பதை திமுக என்றும் கைவிடாது. தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது நிச்சயம்.
அதற்கு ஒவ்வொருவரும் அயராது பாடுபட வேண்டும். மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளையும் வென்று கழக ஆட்சி அமைந்திட சபதம் ஏற்போம் என்றார். முன்னாள் அமைச்சர் தென்னவன், முன்னாள் எம்எல்ஏ சுப.துரைராஜ், சட்ட பாதுகாப்புகுழு வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், துணைச்செயலாளர் சொக்கலிங்கம், தகவல் தொழில்நுட்ப அணி சசிவர்ணன், பேரூராட்சி செயலாளர்கள் பக்ரூதீன்அலி, பிரமையா, இளைஞரணி பாஸ், மாணவரணி மாணிக்கம், நெல்லி, தர்மா, கிளைச்செயலாளர்கள் பூவேந்திரன், கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.