சென்னை: திருவேற்காடு நகராட்சி சுந்தரசோழபுரத்தில் ரூ.333 கோடியில் முடிவுற்ற பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். 377 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.137 கோடி புதிய திட்டப் பணிகளுக்கு துணை முதல்வர் அடிக்கல் நாட்டினார். ரூ.1,000 கோடி மதிப்பில் 1,12,294 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
