×

உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்றார்; குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிய தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுள்ள சூர்யா காந்த், 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை சுமார் 14 மாதங்களுக்கு மேல் இந்தப் பதவியில் வகிப்பார். பூடான், கென்யா, மலேசியா, மொரீஷியஸ், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் தலைமை நீதிபதிகள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் குடும்பத்தினருடன் இவ்விழாவில் பங்கேற்றனர்.

1962-ம் ஆண்டு பிப்​ர​வரி 10-ம் தேதி ஹரி​யா​னா​வின் ஹிசார் பகு​தி​யில் சூர்ய காந்த் பிறந்​தார். ஹிசா​ரில் பள்​ளிப் படிப்​பு, கல்​லூரி படிப்பை நிறைவு செய்த அவர் ரோத்​தக் மற்​றும் குருஷேத்​திரா பல்​கலைக்​கழகத்​தில் எல்​எல்​பி, எல்​எல்​எம் சட்​டப் படிப்​பு​களை படித்​தார். 1984-ம் ஆண்​டில் ஹிசார் மாவட்ட நீதி​மன்​றத்​தில் வழக்​கறிஞ​ராகபணியை தொடங்​கி​னார். பின்​னர் பஞ்​சாப்​-ஹரி​யானா உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கறிஞ​ராக பணி​யாற்​றி​னார்.

கடந்த 2000-ம் ஆண்​டில் ஹரி​யானா அட்​வகேட் ஜென​ரலாக அவர் நியமிக்​கப்​பட்​டார். கடந்த 2004-ம் ஆண்​டில் பஞ்​சாப்- ஹரி​யானா உயர் நீதி​மன்ற நீதிப​தி​யாக பதவி​யேற்​றார். கடந்த 2018-ம் ஆண்​டில் இமாச்சல பிரதேச தலைமை நீதிப​தி​யாக பொறுப்​பேற்​றார். கடந்த 2019-ம் ஆண்​டில் உச்ச நீதி​மன்ற நீதிப​தி​யாக அவர் பதவி​யேற்​றார்.

இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக இருந்த பி.ஆர்.கவாய் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஓய்வு பெறுகிறார்.

Tags : Suryakant ,53rd Chief Justice of the Supreme Court ,President of the Republic ,Thraupati Murmu ,Delhi ,Surya Kant ,Chief Justice ,
× RELATED வங்கி மோசடி வழக்குகளை விசாரிக்க தனி...