×

குரும்பூர் அருகே சிறுமியின் அறுவை சிகிச்சைக்கு நிதிஉதவி கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் வழங்கினார்

ஆறுமுகநேரி, ஜன.7: குரும்பூர் அருகே சிறுமியின் அறுவை சிகிச்சைக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக ஜெ.பேரவை செயலாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் நிதிஉதவி வழங்கினார். குரும்பூர் அருகே உள்ள அழகப்புரம் கிராமத்தை சேர்ந்தவர் பலவேசம். இவருக்கு சங்கரம்மாள் என்ற மனைவியும் கவுரி(18) என்ற மகளும் உள்ளனர். கூலி வேலை செய்துவந்த பலவேசம் சில வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். சங்கரம்மாள் வெடிபட்டறையில் வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார்.

இந்நிலையில் அவரது மகள் கவுரிக்கு அடிக்கடி உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவ பரிசோதனை செய்ததில் உடனடியாக அறுவை சிசிக்சை மேற்கொள்ளவேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து ஆறுமுகநேரியில் உள்ள தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக ஜெ. பேரவை செயலாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் உதவியை நாடினார். நேற்று முன்தினம் கவுரி வீட்டிற்கு சென்று ரூ.25ஆயிரம் நிதிஉதவியை வழங்கினார். இதில் அழகப்பபுரம் ஊராட்சி துணைத்தலைவர் ஆறுமுகம், ஆழ்வை ஒன்றிய அவைத்தவைர் பரமசிவம், ஆறுமுகநேரி இளைஞர் அணி செயலாளர் நிவாஸ்கண்ணன், ராஜபதி கபில், ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன், கிளை செயலாளர்கள் ஒளிமுத்து, கலைவாணன், ஆழ்வை கிழக்கு ஒன்றிய மாணவரணி துணை தலைவர் சுடலைமுத்து, இளைஞரணி துணை தலைவர் பாலாஜி, எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் முத்துசங்கர், தகவல் தொழில் நுட்பபிரிவு செங்கட்ராமன், ஆழ்வை கிழக்கு ஒன்றிய இளைஞர் இளம் பெண்கள் பாசறை இணைசெயலாளர் சண்முகவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : KRM Radhakrishnan ,operation ,Kurumbur ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு...