×

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

கோவை, ஜன. 7:  இந்தியா முழுவதும், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்ைத சேர்ந்தவர்கள் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திடீர் முற்றுகை  போராட்டம் நடத்தினர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என கோஷம் எழுப்பினர். கோவை ரயில் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர். இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, 79 பேரை போலீசார் கைது செய்தனர். இத்திடீர் போராட்டம் காரணமாக, அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : Siege ,Collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...