×

நம் தாய் அமைப்பான நீதிக்கட்சி தலைதூக்கிய நாள் இன்று; நம் உரிமைக்குரலின் உதயம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: நம் தாய் அமைப்பான நீதிக்கட்சி தலைதூக்கிய நாள் இன்று; நம் உரிமைக்குரலின் உதயம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; நம் உரிமைக்குரலின் உதயம்!, இந்த மண்ணின் மைந்தர்களுக்குக் கல்வி – வேலைவாய்ப்பு – அதிகாரத்தில் உரிய பங்கைப் பெற்றுத் தந்து, சமூகநீதியை நிலைநாட்டியே தீருவது என்ற #NonBrahminManifesto-வைச் செயல்படுத்திக் காட்ட, நம் தாய் அமைப்பான நீதிக்கட்சி தலைதூக்கிய நாள் இன்று.

நீதிக்கட்சியின் நீட்சியே நம் திராவிட மாடல் ஆட்சி எனத் தொடர்ந்து மெய்ப்பிப்போம்! சூழும் ஆரிய சூழ்ச்சிகளை எல்லாம் சுக்குநூறாக உடைத்தெறிவோம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்

Tags : K. Stalin ,Chennai ,Chief Minister ,H.E. K. Stalin ,
× RELATED பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில்...