×

திருமண ஏக்கத்தால் மெக்கானிக் தற்கொலை

ஈரோடு, ஜன.5: ஈரோடு சுத்தானந்தன் நகர், ஜெகநாதன் வீதியை சேர்ந்தவர் கண்ணுசாமி. இவரது மகன் சதீஸ்குமார் (29). பைக் மெக்கானிக்கான இவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக பெற்றோர் பெண் பார்த்து வந்தனர். ஆனால், சரியாக பெண் அமையவில்லை. இதனால் மனமுடைந்த சதீஸ்குமார், நேற்று முன்தினம் தனது வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஈரோடு தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : suicide ,
× RELATED தர்மபுரி அருகே இன்ஸ்டாகிராம்...