×

ஆவுடையார்கோவில் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்

அறந்தாங்கி, ஜன. 5: ஆவுடையார்கோவில் அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆவுடையார்கோவில் அருகே நரிக்குடி பகுதியில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வெள்ளாற்றில் இருந்து மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டியை நிறுத்தி சோதனை நடத்தினார். அதில் நரிக்குடியை சேர்ந்த முத்துச்சாமி அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்தார். இதேபோல் சாட்டியக்குடி அருகே ரோந்து பணியின்போது சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த நரிக்குடியை சேர்ந்த விஜயகுமார், விக்னேஷ்வர் ஆகியோரது 2 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தார்.

Tags : Audyarkov ,
× RELATED ஆவுடையார்கோவிலில் சூரிய உலர்த்தியின்...