ஒட்டன்சத்திரம், ஜன.5: ஒட்டன்சத்திரம் அருகே அரசு விழாவில் அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறி ஊராட்சிமன்ற தலைவர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒட்டன்சத்திரம் அருகே பெரியகோட்டை ஊராட்சிமன்ற தலைவராக மலர்விழிச்செல்வி என்பவர் இருந்து வருகிறார். இவரை அரசு விழாக்களுக்கு அதிகாரிகள் அழைப்பு விடுக்காமல் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக தெரிகிறது. இதனிடையே நேற்று பெரியகோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்தில் உள்ள நியாயவிலைக்கடையில் குடும்ப