×

காசிமேஜர்புரத்தில் அகத்தியர் ஆயில்ய பெருவிழா

தென்காசி, ஜன. 5: குற்றாலத்தை அடுத்த காசிமேஜர்புரத்தில் அகத்தியர் ஆயில்ய பெருவிழாவை முன்னிட்டு உலக நன்மைக்கான வேள்வி நடந்தது. அகத்தியர் ஆயில்ய பெருவிழாவை முன்னிட்டு காசிமேஜர்புரம்திருக்குற்றால நங்கை அம்மன் சன்னதி தெருவில் அமைந்துள்ள அகத்தியர் ஞானபீடம் தர்ம சக்கரத்திற்கு காலையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ேஹாமம், அகத்தியர் ஜெயம், ருத்ர ஜெயம், உலக நன்மைக்கான வேள்வி மற்றும் கோ பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பொதிகை  விநாயகருக்கு சிறப்பு வழிபாடு, அகத்தியர், செண்பகா தேவி, குற்றால நங்கை அம்மனுக்கு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைகளை ஜீவநாடி ஜோதிடர் முத்துக்குமாரசுவாமிகள் மற்றும் அம்பை ஸ்கந்தர் குருக்கள் நடத்தினர். விழாவில் அம்பிகா, இலஞ்சி சண்முகசுந்தரம், ராமையா என்ற துரை, மீனாட்சி, மதுரை கணேஷ் ராஜ், வக்கீல் சுரேஷ், பட்டிவீரன்பட்டி சிவச்சந்திரன், சங்கரசட்டநாதன், சுப்பிரமணியன், ராஜா,அனந்தபுரம் செந்துார்பாண்டியன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை முத்துக்குமார சுவாமி மற்றும் அகத்தியர் அன்பர்கள் செய்தனர்.

Tags : festival ,Agathiyar Ayilya ,Kasimajarpuram ,
× RELATED திருமயம் அருகே கோயில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு