×

உப்பள தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கல்

தூத்துக்குடி, ஜன.5: தூத்துக்குடி தொகுதி உப்பளத்தொழிலாளர்களுக்கு சங்க பொதுச்செயலாளர் ஜெகன்பெரியசாமி பொங்கல் போனஸ் வழங்கினார். தூத்துக்குடி தொகுதி உப்பு தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை காலங்களில் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இந்தாண்டிற்கான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சங்க தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சங்க பொதுச்செயலாளர் ஜெகன்பெரியசாமி தலைமை வகித்து, உப்பளத்தொழிலாளர்களுக்கு ரூ.2ஆயிரம் பொங்கல் போனஸாக வழங்கினார். இதில், திமுக பிரதிநிதி பிரபாகர், தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர் மற்றும் சங்க பொருளாளர் மூர்த்தி, துணை செயலாளர் கணேசன், துணை பொருளாளர் விஜி,  நிர்வாகிகள் அன்டோ, சாமுவேல், அந்தோணி, கருப்பசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Pongal ,Uppala ,
× RELATED வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை...