×

கஞ்சா விற்றவர் கைது

அந்தியூர், ஜன. 4:  ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதி கர்நாடக மாநில எல்லையோரம் உள்ளது. இங்கு உள்ள மலைப்பகுதிகளில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டு தமிழ்நாடு மற்றும் கர்நாடக பகுதிகளுக்கு விற்பனை செய்ய கொண்டு செல்லப்படுகிறது. இதனால் இப்பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பர்கூர் மலைப்பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த துருஷ்ணாம்பாளையம் மலைகிராமத்தை சேர்ந்த குமார் (28) என்பவரை தனிப்படை போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 350 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்பு பவானி ஜெ.எம். கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : Cannabis seller ,
× RELATED கஞ்சா விற்றவர் கைது