சென்னை: சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் கிளப் இடத்தை அரசு கையகப்படுத்தியதற்கு எதிரான வழக்கை தனி நீதிபதி விசாரிக்க தடை விதித்து உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, இந்த இடத்தில் அரசின் திட்டங்களை செயல்படுத்த தனி நீதிபதி விதித்த தடையையும் இரு நீதிபதிகள் அமர்வு நீக்கியது. இதனை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது
