×

அறந்தாங்கி அருகே மாங்குடி ஊராட்சியில் அதிமுகவை நிராகரிக்கிறோம் திமுக மக்கள் சபை கூட்டம்

அறந்தாங்கி, ஜன.4: அறந்தாங்கி வடக்கு ஒன்றிய திமுக சார்பில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற பெயரில் மக்கள் கிராமசபைக் கூட்டம் மாங்குடி ஊராட்சி மாங்குடி கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அறந்தாங்கி வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஆலங்குடி எம்.எல்.ஏவுமான மெய்யநாதன் தலைமை தாங்கினார். அறந்தாங்கி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரிசண்முகநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், ஒன்றிய துணைச் செயலாளர் நல்லகூத்தன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் குணவினாயகம், மாவட்ட கவுன்சிலர் சரிதாமேகராஜன், ஒன்றியக் கவுன்சிலர்கள் செந்தமிழ்செல்வன், ரவிச்சந்திரன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் சுந்தர்ராஜன், துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆவுடையார்கோவில் ஒன்றிய திமுக சார்பில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற பெயரில் மக்கள் கிராமசபைக் கூட்டம்  கீழ்க்குடிவாட்டாத்தூர் ஊராட்சி கீழ்க்குடியில் நடைபெற்றது. ஒன்றிய திமுக செயலாளரும், அறந்தாங்கி முன்னாள் எம்.எல்.ஏவுமான உதயம்சண்முகம் தலைமை தாங்கினார். புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அவைத் தலைவர் பொன்துரை முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் திமுக முன்னாள் சட்ட திருத்தக்குழு உறுப்பினர் ராமநாதன், ஆவுடையார்கோவில் ஒன்றியக்குழுத் தலைவர் உமாதேவிகாசிநாதன், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாரதிராஜா, ஒன்றியக்குழு உறுப்பினர் செந்தில்குமரன், அறந்தாங்கி தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சரவணன், கிளை செயலாளர் துரைமாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : DMK ,AIADMK ,panchayat ,Mangudi ,Aranthangi ,
× RELATED காதலியின் கணவனை கொன்ற அதிமுக பஞ்.தலைவர்