×

பொங்கல் பரிசு பொருட்கள் பெற அதிமுகவினர் டோக்கன் கொடுத்ததால் திடீர் சாலை மறியல்

திருவாரூர், ஜன.1:பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.2,500 ரொக்கம் மற்றும் பொருட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் 4 ந் தேதி முதல் இந்த பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ள நிலையில், இதற்கான டோக்கன் வினியோகம் தற்போது வீடு வீடாக வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த டோக்கன்கள் கிராமப்பகுதிகளில் ஆளுங்கட்சியினரை கொண்டு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் குவலைக்கால் ஊராட்சியில் இதேபோன்று ஆளுங்கட்சியினர் மூலம் டோக்கன் விநியோகம் நேற்று முன் தினம் நடைபெற்றதை கண்டித்து ஊராட்சி மன்ற தலைவர் சண்முகவேல் மற்றும் பொதுமக்கள் திருவாரூர் மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Tags : AIADMK ,Pongal ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...