×

அருவங்காடு வெடி மருந்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

குன்னூர், ஜன.1: அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளர்களை திடீரென வேலையை விட்டு நிறுத்தியதால் கொட்டும் மழையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  குன்னூர் அருகே அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை உள்ளது. மத்திய அரசின் பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த தொழிற்சாலை வெடி மருந்து உள்ளிட்ட தளவாட பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இங்கு நிரந்தர பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வருகின்றனர். தூய்மை பணிகளுக்கு என ஒப்பந்த தொழிலாளர்கள் 150 பேர் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் இவர்களை திடீரென பணியில் இருந்து நிறுத்தியதால் தொழிலாளர்கள் கொட்டும் மழையில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகம் தரப்பில் 15 பேருக்கு மட்டும் தற்போது வேலை வழங்குவதாகவும், மீதி உள்ளவர்களுக்கு விரைவில் பணி வழங்குவதாவும் பேச்சுவார்த்தையில் உறுதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

Tags : Aruvankadu ,Explosives Contract Cleaning Workers ,
× RELATED 3 ஆடுகளை தாக்கி கொன்று காற்றாலை நிழலில் ஓய்வெடுத்த பெண் சிங்கம்