×

வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் 7ம் ஆண்டு நினைவு அஞ்சலி

தஞ்சை, டிச. 31: தஞ்சை ரயிலடியில் காவிரி உரிமை மீட்புக்குழு மற்றும் அனைத்து கட்சிகள், இயக்கங்கள் சார்பில் புகழ் அஞ்சலி கூட்டம் நடந்தது. தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் தலைமையில் அனைத்து கட்சியினர் மலரஞ்சலி செலுத்தினர். மக்கள் அதிகார மாநில பொருளாளர் காளியப்பன், தாளாண்மை உழவர் இயக்க தலைவர் திருநாவுக்கரசு, சமவெளி விவசாயிகள் சங்க தலைவர் பழனிராஜன், தமிழர் தேசிய முன்னணி தேர்தல் பணிக்குழு செயலாளர் அய்யனாபுரம் முருகேசன், மகளிர் ஆயம் செயலர் செம்மலர், பெரியார் உணர்வார்கள் கூட்டமைப்பு தலைவர் போழிலன் ஆகியோர் புகழ் அஞ்சலி உரையாற்றினர். தமிழ் தேசிய பேரியக்க செயலாளர் வெங்கட்ராமன், தலைமைக்குழு உறுப்பினர் பழ.ராசேந்திரன், மாவட்ட செயலர் வைகை, விடுதலை தமிழ்புலிகள் குடந்தை அரசன், வெற்றி மற்றும் பல்வேறு கட்சியினர், இயக்கத்தினர் பங்கேற்றனர். அனைத்து கட்சிகள், இயக்கங்கள் ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் நன்றி கூறினார். திருக்காட்டுப்பள்ளி: திருக்காட்டுப்பள்ளி காந்தி சிலை அருகே இயற்கை வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வார் 7வது ஆண்டு நினைவுநாள் அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. அப்போது அவரது படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி மக்கள் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் மக்களுக்கு தென்னை, புங்கன், சொர்கம், மாதுளை, பலா, தங்க அரளி, அரநெல்லி, சென்பகம், மந்தாரை, மஹோகனி உள்ளிட்ட 1500 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Tags : Nammazhvar ,
× RELATED நன்னிலத்தில் நம்மாழ்வார் நினைவு நாள்