×

கரூர் பசுபதிபாளையம் அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கால் முற்றிலும் சேதமான தரைப்பாலம்

கரூர், டிச.31: கரூர் பசுபதிபாளையம் அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து காரணமாக தரைப்பாலம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர், அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் காரணமாக சில நாட்களுக்கு முன்பு அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிகளவு தண்ணீர் வரத்து இருந்தது. பசுபதிபாளையம் அமராவதி ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. இதற்கு முன்பு, பாலம் கட்டும் போது, அனைத்து வாகன ஓட்டிகளும் எளிதாக ஆற்றை கடந்து செல்லும் வகையில் தரைப்பாலம் அமைத்து தரப்பட்டது. பாலம் பயன்பாட்டுக்கு வந்தாலும் தரைப்பாலத்தின் வழியாக குடியிருப்பு வாசிகள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், வெள்ளம் காரணமாக தரைப்பாலம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால், இதனை எளிதாக பயன்படுத்திட முடியாத நிலை நிலவி வருகிறது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிதிலமடைந்த நிலையில் உள்ள தரைப்பாலத்தை மேம்படுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Karur Pasupathipalayam ,ground bridge ,floods ,Amravati River ,
× RELATED இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 37 பேர் பலி..!!