×

சீரமைக்க கோரிக்கை வேளாண்சட்டங்களை திரும்பபெறக்கோரி கரூரில் சிஐடியூ ஆர்ப்பாட்டம்

கரூர், டிச. 31: வேளாண் சட்டங்களை திரும்ப ெபறக்கோரி கரூரில் சிஐடியூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தபால் தந்தி அலுவலகம் முன்பு நடைபெற்ற நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியூ மாவட்ட துணைத்தலைவர் ஹோச்சமின் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகேசன் கலந்து கொண்டு விளக்கரையாற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் சாம்பசிவன், பிற சங்க நிர்வாகிகள் ராஜாமுகமது, கிருஷ்ணமூர்த்தி, தண்டபாணி, அரவிந்த் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு பேசினர். விவசாயிகளுககு விரோதமான புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறவும், இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags : demonstration ,CITU ,revocation ,Karur ,
× RELATED சீராக வழங்க கோரிக்கை பொன்னமராவதியில் மே தின விழா கொண்டாட்டம்