- சீமான் சுலிர்
- மதுரை
- குரு
- மாருத்து பாண்டியஸ்
- நாதக
- தலைமை ஒருங்கிணைப்பாளர்
- சீமான்
- மருது
- Theppakulam
- கரூர்
மதுரை: மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் 224வது குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து நேற்று மரியாதை செலுத்தினார். அவரிடம் நிருபர்கள், ‘‘கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் விஜயை பார்க்க செல்கிறார்கள். இந்த அரசியலை எப்படி பார்க்கிறீர்கள்’’ என்று கேட்டனர்.
அதற்கு சீமான், ‘‘விஜய்யே குறிப்பிட்டுள்ளார் வரலாறு திரும்புகிறது என்று. முத்துராமலிங்க தேவர், மூக்கையா தேவர், கக்கன், காமராஜர் உள்ளிட்ட பெரும் அறிஞர்கள் ஆட்சி செய்த மண்ணில், நல்லாட்சி மலர வேண்டும் என போராடிக் கொண்டிருக்கும்போது. இது வேற பக்கம் திசை திரும்பி செல்கிறது. கல்வி அரசியலை கற்பிக்கவில்லை. ஒழுக்கம், நெறிமுறைகளை கற்று தரும் கல்வியாக இல்லாமல், வியாபாரமாக மாறிவிட்டது. கலையை போற்ற வேண்டியது தான். கலைஞர்களை பாராட்ட வேண்டியது தான். நடித்தால் மட்டுமே நாடாளலாம் என்ற தகுதிகள் வந்துவிடும் என்ற நாட்டு மக்கள் எண்ணுகிறார்களோ? அதுதான் கொடுமையான போக்கு.
போகப் போக ஒரு சமூகம் வளர்ந்து வாழும் என்று தான் பார்க்கிறோம். ஒப்பனையை அழித்த உடனே அரியணையா, நீங்கள் நடிக்கும் போதும் நோட்டை கொடுப்போம், வாழ்வதற்கு. நடிப்பை நிறுத்தினால் நாட்டை கொடுப்போம் ஆள்வதற்கு, இந்த நிலைப்பாட்டை தமிழ் சமூகம் ஏற்கிறதா..? இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நடிப்பு இருக்கிறது. இந்த திரை கவர்ச்சியில் மூழ்கி இருக்கும் தமிழ் இனம் விழிப்புற்று எழவேண்டும். தோற்றுப்போன சமூகத்தில் தேவையற்ற செய்திகளை தலைப்புச் செய்திகளாக மாற்ற வேண்டாம்’’ என்றார்.
