×

பாதை பிரச்னைக்கு தீர்வு காண கோரி அருவங்காடு போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

குன்னூர், டிச.31: பாதை பிரச்னைக்கு தீர்வு காண கோரி குன்னூர் அருகே அருவங்காடு காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. குன்னூர் அருவங்காடு அருகே உள்ள சின்ன பிக்கட்டி கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் தேயிலை  விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் தேயிலை தோட்டத்திற்கு செல்வதற்காக தினமும் பயன்படுத்தி வந்த பாதையை, தனி நபர் ஒருவர் கேட் அமைத்து தடுத்துள்ளார்.

இதனால், பசுந்தேயிலை மூட்டைகளைக் கொண்டு வர முடியாமல் விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இப்பாதை பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று அருவங்காடு காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, இரு தரப்பினரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பாதை பிரச்னைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : Siege ,police station ,Aruvankadu ,
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...