×

தள்ளுவண்டி வியாபாரிகள் தேசிய அடையாள அட்டை கேட்டு கலெக்டர் அலுவலகம் முற்றுகை

பெரம்பலூர், டிச.30: பெரம்பலூரிலுள்ள தள்ளுவண்டி வியாபாரிகள் பலர் தங்க ளுக்கு புதிய தேசிய அடையாள அட்டை வழங்ககோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். பெரம்பலூர் புதுபஸ்டாண்டு பகுதியிலுள்ள தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் பலர் தங்களுக்கு புதிய தேசிய அடையாள அட்டை வழங்க கோரி அம் பேத்கர் தள்ளுவண்டி வியாபாரிகள் சங்கம் சார்பில் நேற்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக த்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். இந்த நிகழ்ச்சியின் போது விடுதலை சிறுத்தை கட்சியின் மாநிலத் துணைச் செ யலாளர் சீனிவாசராவ், முன்னாள் மாவட்டஅமைப்பாளர் பால்ராஜ், வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அ மைப்பாளர் மான், ஆலத் தூர் ஒன்றியச் செயலாளர் இளமாறன் வேப்பூர் ஒன்றி யச்செயலாளர் நந்தன், ஆலத்தூர் ஒன்றிய தொண்ட ரணி துணைஅமைப்பாளர் ஜெயபால் மற்றும் அம்பேத்கர் நடைபாதை வியாபாரிகள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Trolley dealers ,collector ,office ,
× RELATED 2.5 கிலோ நகை அணிந்து வந்த கர்நாடக...