சென்னை: போதிய பயணிகள் முன்பதிவு செய்யாததால் 6 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பயணிகள் கூட்டம் இல்லாத காரணத்தினால் 6 சிறப்பு ரயில்களின் 30 சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மைசூரு – நெல்லை, மைசூரு – காரைக்குடி, மைசூரு – ராமநாதபுரம் என இருமார்க்கங்களில் 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
