×

போலீசாரை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்

விருதுநகர், டிச. 30: விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட அமைப்பாளர் சக்திவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்,  அருப்புக்கோட்டை நகர் போலீசில் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து 90 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்யாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷம் எழுப்பினர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் பாண்டி, முத்துக்குமார், தமிழ்புலிகள் கட்சி வீரப்பொருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.


Tags : protest ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...