சென்னை: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிம பணிகள் தேர்வு-1ஏவில் (குரூப் 1ஏ பணிகள்) உள்ள உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கு தேர்வர்களின் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்னர் சில தேர்வர்கள் உரிய சான்றிதழ்களை சில குறைபாடுகளுடன், சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய தேர்வர்களுக்கு இறுதிவாய்ப்பு வழங்கும் விதமாக வரும் 1ம் தேதி இரவு 11.59 மணி வரை முழு சான்றிதழ்களை மறுபதிவேற்றம் செய்யலாம்.
