×

கொரோனாவில் இருந்து மீண்ட எஸ்ஐ மூச்சுத்திணறலால் பலி

அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம், பசும்பொன் நகர், 1வது அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ராம்சிங்(57).  புழல் காவல்நிலைய சட்டம் - ஒழுங்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். கடந்த 8ம் தேதி ராம்சிங்கிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.  பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை உறவினர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் கடந்த 22ம் தேதி பரிசோதனையில் கொரோனா குணமானது. இதன் பிறகும், அவருக்கு தொடர்ந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி ராம்சிங் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் அம்பத்தூரில் உள்ள இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. மேலும், அவரது உடலுக்கு போலீஸ் அதிகாரிகள், காவலர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்பு நேற்று மாலை அவரது உடல் அரசு மரியாதையுடன்  தகனம் செய்யப்பட்டது.

Tags : SI suffocation ,
× RELATED கொரோனாவில் இருந்து மீண்ட எஸ்ஐ மூச்சுத்திணறலால் பலி