×

ரோட்டில் கிடந்த முதியவர் சாவு

சிவகாசி, அக்.18: சிவகாசியில் ரோட்டில் கிடந்த முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிவகாசி பஸ் ஸ்டாண்டு அருகே சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கிடந்தார். அவரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து இறந்த முதியவர் யார் என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Tags : Sivakasi ,Sivakasi government… ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா