×

சர்வதேச மின்சார வாகன கூட்டமைப்புடன் புதுச்சேரி என்.ஐ.டி புரிந்துணர்வு ஒப்பந்தம்

காரைக்கால், அக்.18: காரைக்காலில் உள்ள புதுச்சேரி என்ஐடி உடன் மின்சார மற்றும் மின்னணு பொறியியல் துறையால் தொடங்கப்பட்ட சர்வதேச மின்சார வாகன கூட்டமைப்பு உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், குறிப்பாக மின்சார வாகனத் துறையில் கல்வி-தொழில் ஒத்துழைப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த கூட்டாண்மை என்.ஐ.டி புதுச்சேரி மாணவர்களுக்கு பயிற்சி, தொழில்துறை பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு ஆதரவுக்கான வாய்ப்புகளை வழங்கும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் என்.ஐ.டி புதுச்சேரி இயக்குனர் டாக்டர் மகரந்த் மதாவ் கங்ரேக்கர் மற்றும் சர்வதேச மின்சார வாகன கூட்டமைப்பு செயலாளர். ஸ்ரீனிவாஸ் குமார்யெர்ரபொத்து ஆகியோர் கையெழுத்திட்டனர். பதிவாளர் டாக்டர் சுந்தரவர்தன், டீன் (ஆர்-சி) டாக்டர் மகாபத்ரா, இஇஇ துறைத் தலைவர் டாக்டர் வினோபிரபா, இணை டீன் (ஆர்-சி) டாக்டர் ராஜு மற்றும் இஇஇ துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் ஹேமசந்தர் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.

 

Tags : Puducherry NIT ,International Electric Vehicle Consortium ,Karaikal ,Department of Electrical and Electronics Engineering ,MoU ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா