×

தட்டார்மடத்தில் திமுக மக்கள் சபை கூட்டம்

சாத்தான்குளம், டிச. 28: சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தட்டார்மடத்தில் மக்கள் சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர்கள் பசுபதி, துரைராஜ், ஆனந்த், அரசூர் செயலாளர் ராஜபாண்டி  முன்னிலை வகித்தனர். தெற்கு ஒன்றிய செயலாளர் பாலமுருகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக  மாநில மீனவரணி துணை அமைப்பாளர் துறைமுகம் புளோரன்ஸ் பேசினார். தொடர்ந்து அதிமுகவை நிராகரிப்போம் என உறுதிமொழி ஏற்று பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. இதில் ஒன்றிய துணை செயலாளர் சக்திவேல், பொறுப்புக்குழு உறுப்பினர் சந்தியா, ஒன்றிய இளைஞரணி செயலாளர் கார்திகேயன், துணை அமைப்பாளர் விக்னேஷ், மகளிரணி அமைப்பாளர் ரோஸ்லின் கலாவதி, கிளை செயலாளர்கள் செல்வன், முரளி ஜெயகிருஷ்ணன், கணேசபாண்டி, ஜோசப், ஆல்டன், செல்வநாதன், மலர் ராஜ், சிவபாலன், ரெனிஷ், கணபதி, ஜெபமாலை ராஜ், சரவணன், ஜெகநாதன் உள்பட பலர்  பங்கேற்றனர்.

Tags : meeting ,DMK People's Assembly ,Thattarmaddam ,
× RELATED காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது...