×

அஞ்சலகங்களில் தங்கப்பத்திரம் விற்பனை இன்று தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது

நாகர்கோவில், டிச. 28: கன்னியாகுமரி முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் கணேஷ்குமார் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய அரசு தங்கப்பத்திரத்திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது. தங்கப்பத்திர விற்பனை இன்று(28ம் தேதி) முதல் ஜனவரி 1ம் தேதி வரை நடக்கிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5 ஆயிரம் ஆகும். தனி நபர் ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் நான்கு கிலோ வரை வாங்கலாம். மேலும் முதலீட்டுத் தொகைக்கு 2.50 சதவீதம் வட்டியும், 8 ஆண்டுகள் கழித்து முதிர்வடையும் நாளில் அன்றுள்ள விலைக்கு நிகரான பணமும் கிடைக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தோடு பான் கார்டு கட்டாயம் தேவை, அதனுடன் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் இவற்றில்  ஏதேனும் ஒன்றின் நகல், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல்பக்க நகல் ஆகியவற்றைக் கொண்டு, தங்கப்பத்திரத்தை அனைத்து அஞ்சலகங்களிலும் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்.

Tags : post offices ,
× RELATED வரும் 29ம் தேதி 24 தபால் நிலையங்களில் பென்சன் அதாலத் குறை தீர்ப்பு முகாம்