×

வரும் 29ம் தேதி 24 தபால் நிலையங்களில் பென்சன் அதாலத் குறை தீர்ப்பு முகாம்

சென்னை: சென்னையில் பென்சன் அதாலத் குறை தீர்ப்பு முகாம் 24 தபால் நிலையங்களில் வரும் 29ம் தேதி நடைபெறும் என தபால் துறை தெரிவித்துள்ளது. சென்னையில் கோட்ட அளவிலான பென்சன் அதாலத் குறை தீர்ப்பு முகாம் வரும் 29ம் தேதி மாலை 4 மணிக்கு முதுநிலை கண்காணிப்பாளர் சென்னை மத்திய கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

தி.நகர், மயிலாப்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட 24 தபால் அலுவலகங்களில் இந்த குறை தீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. சம்பந்தபட்ட பென்சன்தாரர்கள் ஏதேனும் புகார்கள் இருப்பின் அவற்றை தபால் மூலமாகவும் மின்னஞ்சல் (dochennaicitycentral@indiapost.gov.in) மற்றும் வாட்ஸ் அப் (9444251587) மூலமாகவும் 26ம் தேதிக்குள் அனுப்பலாம் என தபால் துறை தெரிவித்துள்ளது.

The post வரும் 29ம் தேதி 24 தபால் நிலையங்களில் பென்சன் அதாலத் குறை தீர்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Benson Adalat ,Chennai ,Benson Adalat Grievance Adjudication Camp ,Department of Posts ,Divisional Benson Adalat Grievance Adjudication Camp ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...