×

தக்கலை அருகே சானல்கரையில் ஆண் சடலம் போலீசார் விசாரணை

குமாரபுரம், டிச.28: தக்கலையை  அடுத்த குமாரபுரம் அருகே மாறாங்கோணம் பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மகன் ஜெஸ்டின் செல்வவிமல்(34). இவருக்கு திருமணமாகி விவாகரத்து ஆகி  உள்ளது. குடிபழக்கம் உண்டு. பெற்றோருடன் வாழ்ந்து வந்தவர் மனைவி பிரிந்த  சோகத்தில் மனமுடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று ஜெஸ்டின்  செல்வவிமல் சானல்கரையில் இரவில் குடித்து கொண்டு இருந்துள்ளார். மறுநாள்  அவரை காணவில்லை. இந்நிலையில் சிறிது தொலையில் உள்ள செம்பருத்திவிளை  பகுதியில் உள்ள சானல் கரையில் நேற்றுமுன்தினம் ஜெஸ்டின்  செல்வவிமல் இறந்து கிடந்தார். இதுபற்றி  அறிந்ததும் கொற்றிக்கோடு போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர்.  போதையில் கீழே விழுந்து இறந்திருக்கலாம் என ேபாலீசார் கருதுகின்றனர். உடலை  போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thakkala ,Chanalkarai ,
× RELATED குலசேகரத்தில் ஸ்கேன் சென்டர் ஊழியர் மாயம்