×

தண்ணீர் திறக்க கோரி உப்பாறு அணை பாசன விவசாயிகள் கும்மியடித்து போராட்டம்

தாராபுரம், டிச. 28: தாராபுரம் அருகே 18 அடி கொள்ளளவு கொண்ட உப்பாறு அணைக்கு அரசு ஆணைப்படி திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர்  திறக்க கோரி பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் அர்ஜுனன் தலைமையில் கடந்த 8ம் தேதி முதல் அணையின் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.20 நாளான போராட்டத்தை பெண்களே முன்னின்று நேற்று நடத்தினர்.

உப்பாறு அணைக்கு உட்பட்ட  கெத்தல்ரேவ் ஊராட்சித் தலைவர் விஜயலட்சுமி செல்வராஜ், முன்னிலையில்  நடைபெற்ற இப்போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு  அணைக்கு தண்ணீர் திறந்து விடக் கோரி பாட்டுப் பாடி கும்மி அடித்தனர். அப்போது விவசயிகள் கூறுகையில்,  அணைக்கு தண்ணீர் திறக்காவிட்டால் கை குழந்தைகள், கால்நடைகளுடன் அணைக்கட்டுகள் இறங்கி குடியேறும் போராட்டத்தை  துவக்குவோம், என்றனர்.

Tags : Upparu ,dam irrigation farmers ,
× RELATED உப்பாறு அணைக்கு முழு கொள்ளளவு தண்ணீர் வழங்கக்கோரி போராட்டம்