×

பஞ்சப்படி உயர்வை கேட்டு பெற சி.ஐ.டி.யு. அறிவுறுத்தல்

திருப்பூர், டிச.27: பனியன் தொழிலாளர்கள் பஞ்சப்படி உயர்வை கேட்டுப் பெற வேண்டும் என சி.ஐ.டி.யு. அறிவுறுத்தி உள்ளது. கடந்த அக்டோபர் மாத சென்னை விலைவாசி புள்ளி  35,578 ஆக உயர்ந்துள்ளது. எனவே, அதன் அடிப்படையில் கணக்கிட்டால் பனியன் தொழிலாளர்களின் பஞ்சப்படி ஷிப்ட் ஒன்றுக்கு ரூ.160.58 ஆகும்.

எனவே, பீஸ்ரேட், ஷிப்ட் ரேட், காண்ட்ராக்ட் என அனைத்து பிரிவு பனியன் தொழிலாளர்களும் இந்த பஞ்சப் படியை கேட்டுப் பெற வேண்டும். பஞ்சப்படி உயர்வை வழங்காத கம்பெனிகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் உடனே சி.ஐ.டி.யு. சங்கத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என சிஐடியு பனியன் பொதுத்தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் சம்பத் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : CITU ,
× RELATED இந்தியா கூட்டணிக்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு