×

கட்டுப்பாடுகளுடன் அனுமதி 20 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் முத்தரையர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தல்

திருத்துறைப்பூண்டி, டிச.27: முத்துப்பேட்டையில் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாநில இளைஞரணி செயலாளர் தீரன் தலைமை வகித்தார். மாநில கலை இலக்கிய அணி செயலாளர் அறிவழகன் வரவேற்றார். கூட்டத்தில் மாநில இளைஞரணி தலைவரும் நடிகருமானபரதன், மாநில ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் ஆகியோர் பேசினார். கூட்டத்தில் தமிழகத்தில் முத்தரையர் சமூக மக்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். முத்தரையர் சமூகத்தினருக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் முன்னுரிமை வழங்க வேண்டும். வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சியில் அதிக இடங்களை பெற்று அனைத்திலும் வெற்றியடைய கடுமையாக உழைப்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேட்டை ரமேஷ், ஒன்றிய செயலாளர் மனோகரன், மாவட்ட செய்தி தொடர்பாளர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Muttahida Qaumi Movement ,
× RELATED மோடியின் பிரசாரத்தால் அதிமுக கூட்டணி...