×

செங்கம் பகுதிகளில் சாராயம், மதுபானம் விற்ற 5 பேர் கைது போலீசார் அதிரடி

செங்கம், டிச.26: செங்கம் பகுதிகளில் சாராயம் மற்றும் மதுபானம் பதுக்கி விற்ற 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். செங்கம் அடுத்த காயம்பட்டு கிராமத்தில் உள்ள குடிசை வீட்டில் சாராயம் விற்கப்படுவதாக எஸ்பி அரவிந்துக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், ஏடிஎஸ்பி அசோக்குமார், ஏஎஸ்பி கிரண் ஸ்ருதி, கலால் இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று சோதனையிட்டனர். அப்போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,000 லிட்டர் சாராயத்தை கைப்பற்றி கீழே ஊற்றி அழித்தனர். மேலும், சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் பொருட்களை அப்புறப்படுத்தினர். இதுதொடர்பாக, மூதாட்டி ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதைத்ெதாடர்ந்து, செங்கம் அடுத்த தீத்தாண்டப்பட்டு, வளையாம்பட்டு, சென்னசமுத்திரம் கிராமங்களில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 4 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 110 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags : area ,Chengam ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி