×

பெத்ததாளாப்பள்ளியில் மக்கள் கிராம சபை கூட்டம் செங்குட்டுவன் எம்எல்ஏ பங்கேற்பு

கிருஷ்ணகிரி, டிச.26: கிருஷ்ணகிரி ஒன்றியம் பெத்ததாளாப்பள்ளியில் “அதிமுகவை நிராகரிப்போம்” என்ற தலைப்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது.  கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். பெத்ததாளப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் அம்சவள்ளி வெங்கடேசன் முன்னிலை வகித்தார். இதில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ., பங்கேற்று பேசினார். இதில், மாவட்ட திமுக துணை செயலாளர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, அணிகளின் நிர்வாகிகள் தனசேகரன், நாராயணமூர்த்தி, அஸ்லாம், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் வாசுதேவன், மாவட்ட பிரதிநிதி தமிழ்செல்வன், நிர்வாகிகள் டேம் பிரகாஷ், மன்னுகான், சின்னபையன், ராஜமாணிக்கம், கல்யாணி ராஜா, கந்தசாமி, சின்னராசு, கோபி, வில்சன், பிரதீஷ், சுப்பிரமணி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : meeting ,Grama Niladhari ,Bettathalappally ,Senkuttuvan MLA ,
× RELATED காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது...