கோவை, டிச.26 : கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு பஞ்சாப் நேஷனல் வங்கி தனது சமூக பொறுப்பு நிதியிலிருந்து கோவை யுனைட்டட் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள ஆதரவற்றோர்,மாற்றுத் திறனாளிகள் மற்றும் மனநலம் குன்றியோர்களுக்கு புத்தாடைகள் மற்றும் பெட்ஷீட்களை வழங்கியது. இவற்றினை பஞ்சாப் நேஷனல் வங்கியின் சென்னை மண்டல அலுவலக துணை மண்டல மேலாளர் திரிவார் குமார் அகர்வால், கோவை மாவட்ட அலுவலக தலைவர் ராமநாதன் ஆகியோர் யுனைடெட் ஆதரவற்றோர் இல்ல செயலாளர் ஸ்ரீதரிடம் வழங்கினார்.