×

டிபன் செய்யாததால் தகராறு காதல் மனைவி தூக்கிட்டு தற்கொலை: கணவனிடம் போலீசார் விசாரணை

ஆவடி: அம்பத்தூரில் டிபன் செய்யாததால் கணவனுடன் ஏற்பட்ட தகராறில், வீட்டில் காதல் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் கணவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.அம்பத்தூர் எஸ்.வி நகர் சிவசண்முகம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் இளையகுமார்(28). இவர், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுகந்தி(24). இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதியினர் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சுஜித்குமார் என்ற 2 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை இளையகுமார் வீட்டில் இருந்து புறப்பட்டு கம்பெனிக்கு சென்று விட்டார். பின்னர், மதியம் சுகந்தி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டர். இதனை பார்த்த, வீட்டு உரிமையாளர் குப்புராஜ் என்பவர் இளையகுமாருக்கு போன் செய்து தகவல் கூறி உள்ளார்.

பின்னர், அவர் கம்பெனியில் இருந்து வீட்டுக்கு விரைந்து வந்து சடலத்தை கட்டி பிடித்து கதறி அழுதுள்ளார். தகவலறிந்து, அம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின்பேரில் அம்பத்தூர் போலீஸ் உதவி கமிஷனர் கனகராஜ் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளையகுமாரிடம் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், வீட்டில் டிபன் செய்யாததால், கணவனுடன் ஏற்பட்ட தகராறில், சுகந்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சுகந்திக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால், ஆர்.டி.ஓ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணைக்கு பிறகு தான், சுகந்தியின் மர்மச்சாவு குறித்து விபரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags : suicide ,Dipan ,
× RELATED தர்மபுரி அருகே இன்ஸ்டாகிராம்...