×

ஜல்லிக்கட்டு காளை முட்டி உரிமையாளர் பலி

மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி தாமஸ் நகர் சவேரியார் புரத்தை சேர்ந்தவர் அந்தோணி முத்து(எ)பீட்டர்(52). இவரது மனைவி செவத்தியம்மாள். திருமணமாகி 30 ஆண்டுகளாகிறது. கருத்து வேறுபாடு காரணமாக செவத்தியம்மாள் கணவரை பிரிந்து கடந்த 8 ஆண்டுகளாக அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார். அந்தோணிமுத்து கடந்த 7 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வந்தார். நேற்றிரவு மழை பெய்ததால் அந்தோணிமுத்து தோட்டத்தில் கட்டி இருந்த காளையை வீட்டுக்கு ஓட்டிவர சென்றார்.

அப்போது அவரை காளை முட்டி தள்ளியது. இதில் கழுத்து, வலது கால் தொடையில் பலத்த காயம் ஏற்பட்டு அந்த இடத்திலேயே இறந்தார். வையம்பட்டி போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : Jallikattu ,Manapparai ,Anthony Muthu ,A) Peter ,Saveriyar Puram ,Thomas Nagar, ,Vaiyampatti, Manapparai, Trichy district ,Sevathiyammal ,
× RELATED இந்தியாவின் முக்கிய நகரங்களில் சர்வே;...