×

வழக்கறிஞர் கொலை வழக்கு அறிக்கை தாக்கல் செய்ய போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு


சென்னை, டிச. 25: திருவாரூர் மாவட்டத்தில் நடந்த வழக்கறிஞர் கொலை வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே முனியூர் கிராமத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜ்குமார். இவர், நீடாமங்கலம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். ராஜ்குமார் கடந்த அக்டோபர் மாதம் கட்டையடி என்ற இடத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யபட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக அரித்துவார மங்களம் உதவி ஆய்வாளர் அன்பழகன் விசாரணை நடத்தி வருகிறார். இந்த விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி ராஜ்குமார் மனைவி சந்தியா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கொலையில் ஈடுபட்ட நபர்களை காப்பாற்றுவதற்தாக அனைத்து ஆதாரங்களையும் காவல்துறையினர் அழித்ததாகவும் கொலைக்கு சம்பந்தமில்லாத மூன்று பேரை தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.
எனவே இந்த விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ரவீந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது கொலை வழக்கின் விசாரணையின் தற்போதைய நிலை அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை 3 வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

Tags : ICC ,
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...