கரூர்: கரூர் துயர சம்பவம் மிகவும் கொடுமையானது, யாராலும் நினைத்துப் பார்க்க முடியாதது என கரூரில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் செந்தில் பாலாஜி பேட்டி அளித்துள்ளார். துயர சம்பவத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் ஆறுதலை தெரிவித்த முதலமைச்சருக்கு நன்றி. உடனடியாக கரூருக்கு வந்த முதல்வர், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
