×

சேந்தமங்கலம் ஒன்றியத்தில் திமுக சார்பில் கிராமசபை கூட்டம்

சேந்தமங்கலம், டிச.25: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம்  ஒன்றிய திமுக சார்பில், அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் கிராமசபை  கூட்டம் துத்திக்குளம், பெரியகுளம் ஊராட்சிகள், காளப்பநாயக்கன்பட்டி   சேந்தமங்கலம் பேரூராட்சிகளில் நேற்று நடந்தது. ஒன்றிய செயலாளர்  அசோக் குமார் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்குமார், தலைமை கழக பேச்சாளர் முன்னாள் எம்எல்ஏ சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டு  பேசினர்.
கூட்டத்தில் 100க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்துகொண்டு, அதிமுக ஆட்சியில் அடிப்படை வசதிகள் மற்றும் எந்த திட்டமும்  முறையாக செயல்படுத்தப்படவில்லை, முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை, சமையல் எரிவாயு விலை  உயர்வு, தெருவிளக்கு இல்லை என சரமாரியாக புகார் கூறி, அதிமுகவை நிராகரிப்போம் என கோஷசம் எழுப்பினர். நிகழ்ச்சியில் நகர செயலாளர் தனபாலன், பேரூர் செயலாளர் நடேசன்,  ஒன்றியக்குழு தலைவர் மணிமாலா சின்னுசாமி, துத்திக்குளம் ஊராட்சி தலைவர் குணசேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கதிர்வேல், முன்னாள்  பேரூராட்சி தலைவர்கள் பெரியசாமி, தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ராசிபுரம்: முத்துகாளிப்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம், மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ஊராட்சி மன்ற தலைவர் அருள் முன்னிலையில், ஒன்றிய செயலாளர் ஜெகநாதன் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட பொருளாளர் செல்வம், ஒன்றிய குழு உறுப்பினர் பாலசந்திரன், ஒன்றியக்குழு துணை தலைவர் சிவக்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் அருளரசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பிள்ளாநல்லூரில் கிராமசபை கூட்டம் பேரூர் பொறுப்பாளர் சுப்ரமணியம் தலைமையில் நடந்தது. நாமக்கல்: நாமக்கல் அடுத்த நல்லிபாளையத்தில் மேற்கு நகர திமுக சார்பில், கிராமசபை கூட்டம் நகர பொறுப்பாளர் சிவக்குமார் தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் மாநில இலக்கிய அணி புரவலர் மணிமாறன், சட்ட திட்டக்குழு உறுப்பினர் நக்கீரன், மாநில மகளிர் தொண்டர் அணி இணை செயலாளர் ராணி, பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் மாயவன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Village council meeting ,DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி