×

ஆறுமுகநேரியில் எம்ஜிஆர் நினைவு தினம் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் மரியாதை செலுத்தினார்

ஆறுமுகநேரி, டிச.25: முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு சாகுபுரத்தில் உள்ள அவரது சிலைக்கு தெற்கு மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 33வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ஆறுமுகநேரி மெயின் பஜாரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். படத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஆறுமுகநேரி அருகே சாகுபுரத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கும் அவர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 இதில் ஆறுமுகநேரி நகர செயலாளர் ரவிச்சந்திரன், ஜெ.பேரவை நகர செயலாளர் ராமசாமி, இளைஞரணி செயலாளர் நிவாஸ் கண்ணன், துணை செயலாளர்கள் தயாவதி, பெரியசாமி, பொருளாளர் காசி விஸ்வநாதன், அவைத்தலைவர் மகராஜன், சாகுபுரம் அண்ணா தொழிற்சங்க செயலாளர் செல்வம் மற்றும் அதிமுகவினர் திரளாக பங்கேற்றனர்.

Tags : KRM Radhakrishnan ,Arumuganeri ,MGR Memorial Day ,
× RELATED ஆத்தூர் அருகே தறிகெட்டு ஓடிய கார் மளிகை கடைக்குள் புகுந்தது