×

சாலையில் வீசப்பட்ட சந்தன கட்டைகள்

பாலக்காடு,டிச.25: கேரள-தமிழக எல்லை நடுப்புணி - எருத்தியாம்பதி சாலையோரம் சித்தூர் கலால்துறை இன்ஸ்பெக்டர் மது நேற்று வாகன தணிக்கையில்  ஈடுப்பட்டிருந்தார். அப்போது பொள்ளாச்சியிலிருந்து நடுப்புணி வழியாக கொழிஞ்சாம்பாறை நோக்கி பைக்கில் வந்த வாலிபர்கள்,அதிகாரிகள் நிற்பதை பார்த்தவுடன் சாக்கில் மறைத்து கொண்டு வந்திருந்த 12 கிலோ சந்தனக்கட்டைகளை சாலையோர்ம் புதர்காட்டில் தூக்கி வீசிவிட்டு பைக்கில் தப்பினர். அவர்கள் வீசி சென்ற 6 சந்தன கட்டைகள் 12 கிலோ எடை கொண்டவை. சந்தனக்கட்டைகளை கொல்லங்கோடு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

Tags : road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி